• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மண்டைதீவு புதைகுழி வழக்கு – காவல்துறையினருக்கு நீதிமன்று உத்தரவு

GenevaTimes by GenevaTimes
December 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மண்டைதீவு புதைகுழி வழக்கு – காவல்துறையினருக்கு நீதிமன்று உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16) ஊர்காவற்றுறை நீதிமன்றில்
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்
குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து நாளையதினம்
சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர், மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக இன்றையதினம் (16) திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (16) குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிபதி
சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

காவல் நிலையத்தில் பதிவு

இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் குறித்த வழக்கு தொடர்பாக
அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும்
சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடரான கிடைக்கப்பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின்
அறிக்கையை எழுத்து மூலமாக நிதிமன்றில் சமர்ப்பித்தனர்.

கையால் எழுதிய குறித்த அறிக்கையை
யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரி
சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த
அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து நாளையதினம் (17.12.2025) மீண்டும்
அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்பதாக மண்டைதீவு புதைகுழி தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும்
கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை
முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு
நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த
சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான
சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால்,
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்ககான அனுசியா ஜெயகாந்த், கருணாகரன் நாவலன், திருநாவுக்கரசு சிவகுமாரன், செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன்,
மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள்
ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் விசாரணை

இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளைச் சட்ட ரீதியாக
அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல்
செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 புதன் ஊர்காவற்துறை நீதிவான்
நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, ஊர்காவற்துறை காவல்துறையினரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான
வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்து.

இதனையடுத்து இவ்வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம்
பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான
அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு
நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆனாலும் பல வருடங்கள் கடந்த விடையம் என்பதால் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு
காவல்துறையினர் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியமையால் வழக்கு டிசம்பர் மாதம்
16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு டிசம்பர் 16 ஆம் திகதியான இன்று மன்றில்
எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நாளை தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கையை
சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு நீதிமற்று
உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

துணை அமைச்சரிலிருந்து முழு அமைச்சர்: மனித வள அமைச்சு பொறுப்பு ஏற்றார் டத்தோஶ்ரீ ரமணன் | Makkal Osai

Next Post

நேஷனல் ஹெரால்ட்: சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு | இந்தியா

Next Post
நேஷனல் ஹெரால்ட்: சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு | இந்தியா

நேஷனல் ஹெரால்ட்: சோனியா, ராகுல் மீதான குற்றச்சாட்டை ஏற்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin