• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்! கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்!

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்! கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.


36 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தன்று இலங்கையின் இராணுவத்தால் மண்டைதீவில் நடத்தப்பட்ட படுகொலைச் சாட்சி நினைவிடத்திலேயே இன்றையதினம் தீவக மக்கள் ஒன்றுகூடி தமது உறவுகளை நினைவுகூரி சுடரேற்றி மலர் தூவி அஞ்சலித்தனர்.



தீவக நினைவேந்தல் குழு மற்றும் தீவக முன்னேற்றக்களகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நினைவேந்தல் அனுஸ்டிப்பு நிகழ்வில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட உறவுகளின் வாழும் உறவான ஸ்பன் மற்றில்டா முதன்மைச் சுடரேற்றிவைத்து நினைவு நினைவு கூரலை ஆரம்பித்து வைத்தார்.

மலர்மாலை அணிவித்து அஞ்சலி

தொடர்ந்து அருட்தந்த வசந்தன், மற்றும் தீவக முன்னேற்றக் கழக தலைவர் பிரகலாதன் ஆகியொரால் நினைவிடத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நினைவேந்தல் நடைபெற்றது.

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்! கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்! | 36Th Memorial Day Mandaitivu Massacre


தொடர்ந்து உருவப்படங்களுக்கு உறவுகளால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மண்டைதீவு பங்குத்தந்தை அலோய் அருணேஷகும்மார், அருட்தந்த வசந்தன்,அருட்சகோதரிகள், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி.அசோக்குமர், பிரதேச சபை உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், அனுசியா ஜெயகாந்த், மற்றும், ஜோசம் கனிஸ்டன் பொதுமக்கள் என பலரும் மலர்தூவி அஞ்சலித்தனர்.


முன்பதாக 1990 ஆம் ஆண்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.


இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் குறிப்பிட்ட சில கிணறுகளில் இருப்பதாகவும் அதற்கான வாழும் சாட்சியங்கள் இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிபையில் குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா, மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் இதற்கான தீர்வுகோரி ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

கோர சம்பவத்துக்கான சாட்சி


இதேநேரம் குறித்த சம்பவம் குறித்து வாழும் சாட்சியாக இருக்கும் படுகொலைசெய்யப்பட்ட ஒருவரது தாயாரும் சகோதரியும் அன்றைய நாள் வடுக்களையும் வேதனைகளையும் சாட்சியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்! கண்ணீரில் நனைந்த படுகொலையின் நினைவிடம்! | 36Th Memorial Day Mandaitivu Massacre


இதன்போது மகன இழந்த தாயார் கூறுகையில், 1990.08.25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இந்த படுகொலையும் காணாமலாக்கலும் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்டது.


இதில் தனது மகன் இராணுவத்தால் என் கண் முன்னே கைது செய்யப்படு எனது உறவினர் ஒருவரது வீடின் பின் பகுதியில் வைத்து கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.



அதன் பின்னர் அவர்களை சுட்டுக் கொன்றனர். இந்த கோர சம்பவத்துக்கு நான் சாட்சி.அதேபோன்று சுற்றுவட்டத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட பல உடலங்களை சிலவற்றை அவ்வூர் மக்களைக்கொண்டு சேகரித்து கிணறுகளில் போட்டு மூடினர்.



அவ்வாறு புதைக்கப்பட்ட கிணறுகளில் ஒன்றுதான் இன்று நினைவு கூறப்படும் கிணறு. இந்த கிணறு போன்று இன்னும் சில கிணறுகள் இன்னும் இருக்கின்றன என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

மாணவர்களின் குரலை ஒடுக்காதீர்கள், அவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு இடமளியுங்கள், என்று பிரதமர் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தினார். – Malaysiakini

Next Post

“பிரியாணியில் ருசி இல்லை.. உப்பு அதிகம்..” ஹோட்டலில் சிறுவர்கள் செய்த கொடூரம்.. டெல்லியில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“பிரியாணியில் ருசி இல்லை.. உப்பு அதிகம்..” ஹோட்டலில் சிறுவர்கள் செய்த கொடூரம்.. டெல்லியில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

"பிரியாணியில் ருசி இல்லை.. உப்பு அதிகம்.." ஹோட்டலில் சிறுவர்கள் செய்த கொடூரம்.. டெல்லியில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin