இதன்படி மணிப்பூரின் ஜிரிபம் உள்பட 9 மாவட்டங்களில் நவ. 29ஆம் தேதி வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை குறித்து மதிப்பாய்வு செய்த பிறகு மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், காக்சிங், பிஷ்னுபூர், தெளபால், சூரசந்த்பூர், கங்போக்பி, பெர்ஸாவல் மற்றும் ஜிரிபம் ஆகிய பகுதிகளில் அடுத்த இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

