Last Updated:
அதிவேக ரயில் பயணத்தை அனுபவித்த பிரதமர் மோடி, ஜப்பானில் பயிற்சி பெறும் இந்திய ரயில் ஓட்டுநர்களை சந்தித்துப் பேசினார்.
ஜப்பானில் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில், பிரதமர் மோடி பயணித்தார்.
அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் டோக்கியோவில் இருந்து சென்டைக்கு புல்லட் ரயிலில் சென்றார். அந்த புல்லட் ரயில் ஒரு மணிநேரத்தில் 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. அதிவேக ரயில் பயணத்தை அனுபவித்த பிரதமர் மோடி, ஜப்பானில் பயிற்சி பெறும் இந்திய ரயில் ஓட்டுநர்களை சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் 2030 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஷின்கேன்சன் என்ற இந்த புல்லட் ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக இதனை இந்தியாவில் அறிமுகம் செய்ய ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், டோக்கியோவில் உள்ள செமி கண்டக்டர் உற்பத்தி ஆலையில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். பயிற்சி அறை, உற்பத்தி ஆலை ஆகியவற்றை கையுறை அணிந்து சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் கூட்டுறவில் செமி கண்டக்டர் துறை முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
August 30, 2025 3:52 PM IST
மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்… ஜப்பான் பிரதமருடன் பயணம் செய்த பிரதமர் மோடி!


