Courtesy: டில்ஷான்
மட்டக்குளிய பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தின் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கமராவிலேயே விபத்துசம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது அதிவேகமாக வரும் காரானது முதலில் ஒரு மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு வருவதோடு, அந்த திசையில் திரும்பிய மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதவது காணொளியில் பதிவாகியுள்ளது.
காவல்துறையின் நடவடிக்கை
இந்நிலையில் விபத்தை பார்வையிட வந்தவர்களை விலக்கி விட்டு சம்பவ இடத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காரணம் கோபத்தில் சிலர் விபத்து ஏற்பட காரணமான வாகனத்தை தாக்கி எரிப்பதற்க்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனை தடுக்கும் முகமாகவே காவவல்துறை பொது மக்கள் அனைவரையும் அந்த இடத்தில் இருந்து அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

