மட்டக்களப்பு, பார் வீதியில் அமைந்துள்ள லூத்துமாதா ஆலயத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் திடீரென தீப்பிடித்ததைத் தொடர்ந்து, அங்குப் பெரும் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், துரிதமாகச் செயல்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தினால் உணவகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

