Last Updated:
உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்த தீர்ப்பை மாற்ற முடியாது என தெரிவித்தது.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குடியரசுத் தலைவரின் கேள்விகள் தொடர்பாக விளக்கம் வேண்டுமானால் தரலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மசோதா விவகாரத்தில் ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார்.
இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ், அரசியலமைப்பு சட்ட விதிமுறைகள் படி, இந்த மனுவை திருப்பி அனுப்புவதை தவிர வேறு வழி கிடையாது என்றும் அனைத்து 14 கேள்விகளுக்கும் தற்போதைய தீர்ப்பிலும், முந்தைய தீர்ப்புகளிலும் தெளிவாக பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம் குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், மசோதா விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரம் குறித்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கம் வேண்டுமானால் தரலாம். ஆனால், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியாது என தெரிவித்தனர்.
Delhi,Delhi,Delhi
August 20, 2025 10:12 AM IST
ஜனாதிபதியின் 14 கேள்விகள் : “விளக்கம் தருகிறோம்… தீர்ப்பை மாற்ற முடியாது” – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!


