Last Updated:
மக்கள் தொகை கணக்கெடுப்பில் மத்திய அரசு வெளியிட்ட 33 கேள்விகள், வீட்டு அமைப்பு, வசிப்போர் எண்ணிக்கை, குடிநீர், மின்சாரம், இணையம், தொலைபேசி உள்ளிட்ட விவரங்களை கேட்கும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்பட உள்ள 33 முக்கிய கேள்விகள்
அடுத்தாண்டு நடத்தப்படவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்களிடம் 33 வகையான கேள்விகள் கேட்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2011க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளன. முதல் கட்டம் அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். இந்நிலையில் கணக்கெடுப்பின்போது மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வீட்டின் சுவர், கூரை, தரை கட்ட என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன? வீட்டில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன? வீட்டின் உரிமை நிலை என்ன? வீட்டில் எத்தனை பேர் உள்ளனர்? அவர்கள் வசிக்க எத்தனை அறைகள் உள்ளன? குடும்பத்தில் எத்தனை திருமணமான தம்பதிகள் உள்ளனர்? ஆகிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
குடிநீரை பொறுத்தவரை போர்வெல், கிணறு அல்லது பிற ஆதாரங்கள் மூலம் வழங்கப்படுகிறதா? மின்சார வகை, கழிவறை உள்ளதா? குளியலறை உள்ளதா? சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் எது? போன்ற கேள்விகள் உள்ளன.
வீட்டில் ரேடியோ அல்லது தொலைக்காட்சி உள்ளதா? இண்டர்நெட் இணைப்பு உள்ளதா? மற்றும், மடிக்கணினிகள், கணினிகளின் எண்ணிக்கையும் கேட்கப்படும். வீட்டில் உள்ள லேண்ட்லைன் தொலைபேசிகள், மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தரவுகளும் சேகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jan 23, 2026 12:12 PM IST


