
Last Updated:
கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.பி.யும், நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சம்மன் அனுப்பப்படும் என்று கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறியதற்கு, அந்நிறுவனத்தின் இந்திய அதிகாரி மன்னிப்பு கோரினார்.
அமெரிக்காவில் பாட்கேஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மார்க் ஜூகர்பெர்க், கொரோனாவை எதிர்கொண்ட விதம், பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றால் ஆளும் அரசுகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்ததாகக் கூறினார். இதனால், 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆளும் கட்சிகள் தோல்வி அடைந்ததாகத் தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.பி.யும், நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே, மெட்டா நிறுவனம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி சம்மன் அனுப்பப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், எவ்வித உள்நோக்கமும் இன்றி நேர்ந்த இந்தத் தவறுக்கு மன்னிப்பு கோருவதாக, மெட்டா நிறுவனத்தின் இந்தியாவிற்கான துணைத் தலைவர் ஷிவ்நாத் துக்ராள் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்ட பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, “இது 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 15, 2025 7:57 PM IST

