ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். இந்த நாளில் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பம், தடை இருந்தாலும் விலகி விடும் என்று சொல்லப்படுகிறது. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி வந்தாலும், விநாயகர் அவதரித்ததாக கருதப்படும் ஆவணி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை, மகா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கிறோம்.
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மகா சங்கடஹர சதுர்த்தி மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் ஒரு ஆண்டில் வரும் அனைத்த சங்கடஹர சதுர்த்தி நாளிலும் விரதம் இருந்து விநாயகரை வழிபட்ட பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க மகாசங்கடஹர சதுர்த்தி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதியான இன்று அமைந்துள்ளது.
இந்த நாளில் நாள் முழுவதும் விரதம் இருந்து விநாயகரை வழிபடலாம். அப்படி முடியாதவர்கள் பால், பழங்கள், கிழங்கு வகைகள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
– நாள் முழுவதும் விநாயகரின் திருநாமங்களை சொல்லியபடி இருக்க வேண்டும்.
– மாலையில் சந்திர தரிசனம் செய்து விநாயகரை வழிபட்டு, சந்திர தரிசனம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
– அதிகாலையில் எழுந்து நீராடி, தூய ஆடை அணிந்து , விநாயகர் முன்பாக விளக்கேற்றி வழிபட வேண்டும்.
– மாலை நேரத்தில் கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.
– விநாயகருக்கு உகந்த அருகம்புல், எருக்கம்பூ மாலை அணிவிக்க வேண்டும்.
– விநாயகருக்குரிய 108 போற்றி மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்யலாம்.



