• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு என தகவல்

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு என தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:January 29, 2025 1:03 PM IST

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைவதற்கு பிரார்த்திப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

News18News18
News18

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த கும்பமேளா நடைபெறும்.

இந்நிலையில் 17 வது நாளான இன்று மௌனி அமாவாசை புனித திருநாளை முன்னிட்டு அமிர்த ஸ்நானம் எடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்தனர். அரசு அளித்த தகவலின் படி இன்று காலை 10 மணிக்கு முன்னதாகவே 3 கோடிக்கும் அதிகமான திரிவேணி சங்கமத்தில் குவிந்து புனித நீராடினர்.

திடீரென நெரிசல் ஏற்பட்டதில் 30க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதிகாலையிலேயே கூட்டம் அதிக எண்ணிக்கையில் குவிந்தது நெரிசலுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கும்பமேளாவை முன்னிட்டு பிரக்யாராஜில் மட்டும் 10 கோடி பக்தர்கள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசலை தொடர்ந்து உத்தரப்பிரதேச அரசு துரிதமாக நடவடிக்கையை எடுத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

இதையும் படிங்க – “யாருக்கும் எதிரான பாகுபாடு இல்லை” – பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைவதற்கு பிரார்த்திப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை உத்தரப்பிரதேச அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

January 29, 2025 1:03 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || மைத்திரியின் ரிட் மனு விசாரணைக்கு வருகிறது

Next Post

Steve Smith : டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Next Post
Steve Smith : டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Steve Smith : டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin