Last Updated:
கும்பமேளாவை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 2700 சிசிடிவி கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மகாகும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார்.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கு பக்தர்கள் 3 கோடிக்கும் அதிகமானோர் அதிகாலையிலேயே குவிந்தனர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் மகா கும்பமேளா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது.
தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த கும்பமேளா நடைபெறும். இந்நிலையில் 17 வது நாளான இன்று மௌனி அமாவாசை புனித திருநாளை முன்னிட்டு அமிர்த ஸ்நானம் எடுப்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்தனர். அரசு அளித்த தகவலின் படி இன்று காலை 10 மணிக்கு முன்னதாகவே 3 கோடிக்கும் அதிகமான திரிவேணி சங்கமத்தில் குவிந்து புனித நீராடினர்.
இந்நிலையில் திடீரென நெரிசல் ஏற்பட்டதில் 30க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அதிகாலையிலேயே கூட்டம் அதிக எண்ணிக்கையில் குவிந்தது நெரிசலுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கும்பமேளாவை முன்னிட்டு பிரக்யாராஜில் மட்டும் 10 கோடி பக்தர்கள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத்தை 4 முறைக்கும் அதிகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தார். மேலும் கும்பமேளா நிகழ்வுகளை பிரதமர் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க – மகாகும்பமேளாவில் குவிந்த 10 கோடி பக்தர்கள்.. நெரிசல் ஏற்பட்டது எப்படி?
கும்பமேளாவை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 2700 சிசிடிவி கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
January 29, 2025 11:54 AM IST


