Last Updated:
Maha Kumbh stampede | கும்பமேளா ஏற்பாட்டில் நிகழ்ந்த குளறுபடியே கூட்ட நெரிசலுக்கு காரணம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பக்தர்களை விட்டுவிட்டு வி.ஐ.பி.க்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாகவும் ராகுல் காந்தி புகார் கூறியுள்ளார்.
கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் திடீரென கூட்டம் கூடியதால்தான் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் அமாவாசையையொட்டி புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய டிஐஜி வைபவ் கிருஷ்ணா, அமாவாசை என்பதால் திரிவேணி சங்கமத்தில் திடீரென கூட்டம் கூடியதால் தடுப்புகள் உடைந்ததாகவும், இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் விளக்கமளித்தார்.
90 பேர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களில் 30 பேர் உயிரிழந்ததாகவும் வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார். 36 பேர் காயம் காரணமாக உள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதனிடையே கூட்ட நெரிசல் குறித்து ஆராய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகா கும்பமேளா கூட்ட நெரிசல்.. உ.பி. முதல்வரிடம் விபரங்களை கேட்டறிந்த பிரதமர்
இதற்கிடையே கும்பமேளா ஏற்பாட்டில் நிகழ்ந்த குளறுபடியே கூட்ட நெரிசலுக்கு காரணம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். பக்தர்களை விட்டுவிட்டு வி.ஐ.பி.க்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாகவும் ராகுல் காந்தி புகார் கூறியுள்ளார்.
January 30, 2025 6:15 AM IST
Maha Kumbh Stampede | மகா கும்பமேளாவில் 30 பேர் பலி: கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி? – விளக்கமளித்த உ.பி காவல் துறை!


