ராஜிநாமா ஏன்?
பீட் மாவட்டத்தில் பஞ்சயாத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் மாநில அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த மாநில அமைச்சா் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய கூட்டாளி வால்மிக் கராத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, புணேவில் உள்ள காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் வால்மிக் சரணடைந்தார்.
இதனால் தனஞ்சய் முண்டேவை அமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, தனஞ்சய் முண்டேவின் முதல் மனைவி கருணா சர்மா, கடந்த 2020ஆம் ஆண்டு பாந்த்ரா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட குடும்ப வன்முறை வழக்கில் பிப்ரவரி மாதம் தீர்ப்பு வந்தது.
முண்டே மீதான குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், முதல் மனைவி மற்றும் மகளின் பராமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ. 2 லட்சம் அளிக்க இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிர அரசுக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவாருடன் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திங்கள்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு முண்டேவை பதவி விலகக் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

