• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிரா முதல்வர் யார்? அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்!

GenevaTimes by GenevaTimes
November 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
மகாராஷ்டிரா முதல்வர் யார்? அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132 தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய அதிகபட்ச தொகுதிகள். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனா 57 தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

இவ்வளவு பெரிய வெற்றி பெற்று, தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆன நிலையிலும், அந்த மாநிலத்தில் இன்னும் புதிய அமைச்சரவையும் முதல்வரும் யார் என்பது முடிவு எடுக்கப்படாமல், பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

விளம்பரம்

கடந்த ஆட்சியில் மகாயுதி கூட்டணியில் ஷிண்டே சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகிய இருவரும் துணை முதல்வராக இருந்தனர். இந்நிலையில், தற்போது மீண்டும் வெற்றி பெற்ற பிறகு யார் முதல்வர் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தக் கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக கட்சியைச் சேர்ந்தவர் தான் முதல்வராக நியமிக்கப்படுவார் என பேச்சு இருந்தது. அதிலும், தேவேந்திர ஃபட்னாவிஸ் தான் அடுத்த முதல்வர் என்றே பேச்சுகள் இருந்தன. ஆனால், இதற்கு ஷிண்டே சிவசேனாவும் ஏக்நாத் ஷிண்டேவும் தடையாக இருப்பார்கள் என்றும் பேச்சுகள் இருந்தன.

ஏக்நாத் ஷிண்டே, ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நான் மோடியிடம் பேசிவிட்டேன். முதல்வர் நியமனத்தில் இடையூறாக இருக்க மாட்டேன். அவர் என்ன முடிவுகள் செய்கிறாரோ அதற்கு கட்டுப்படுவேன் என்று தெரிவித்துவிட்டேன்” எனத் தெரிவித்தார். இது பாஜக முதல்வர் நியமிப்பதில் இனி சிக்கல் இல்லை என்பதற்கான அறிகுறியாக தெரிந்தது.

விளம்பரம்
அதிக கொலஸ்ட்ரால் மற்றும் பித்தப்பை கற்களை உருவாக்கும் 7 நிறைவுற்ற உணவுகள்.!


அதிக கொலஸ்ட்ரால் மற்றும் பித்தப்பை கற்களை உருவாக்கும் 7 நிறைவுற்ற உணவுகள்.!

ஏக்நாத் ஷிண்டேவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகும் அங்கு தொடர்ந்து முதல்வர் தேர்வில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இப்படியான சூழலில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூவருடனும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து சி.என்.என். நியூஸ்18-க்கு கிடைத்த தகவலின்படி, ஏக்நாத் ஷிண்டே, அமைச்சரவையில் தனது சிவசேனாவிற்கு 12 அமைச்சர் பதவிகளை கேட்டிருக்கிறார்.

விளம்பரம்

பாஜக எப்போதும்போல், இரு துணை முதல்வர்களுடன் ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. இதில், தேவேந்திர ஃபட்னாவிஸ் பெயர் தான் முதல்வர் பொறுப்புக்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல், இரு துணை முதல்வர்களில் ஒன்று ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்க பேசப்பட்டது. ஆனால், அவர் அதனை மறுத்துள்ளார். மேலும், அந்தப் பதவிக்கு தனது மகன், ஸ்ரீகாந்தை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். மற்றொரு பக்கம் அஜித் பவார் ஒரு துணை முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதி என்கின்றனர்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கும் டிரம்ப்! பயங்கர எச்சரிக்கை விடுத்த புதின்!

அஜித்பவார் துணை முதல்வர் பதவி மட்டுமின்றி, நிதி, சிறுபான்மைத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளையும் கேட்டு வருகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி, வரும் டிசம்பர் 7-ம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த ஏக்நாத் ஷிண்டே, “ஆலோசனை நல்லபடியாக முடிந்தது. இது முதல் கூட்டம் தான். மகாயுதி மற்றொரு கூட்டத்தையும் நடத்தும். தற்போது அமித்ஷா மற்றும் ஜெ.பி. நட்டாவுடன் பேசினோம். மகாயுதியின் அடுத்த கூட்டத்தில், யார் முதலமைச்சர் என்பதை முடிவு செய்வோம். அந்தக் கூட்டம் மும்பையில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை

Next Post

விராட் கோலியின் ஃபார்ம் – ‘விரும்பாத’ ஆலன் பார்டர், மகிழ்ச்சியில் திராவிட்! | Virat Kohli form Unwanted for aussie says Allan Border Dravid is happy

Next Post
விராட் கோலியின் ஃபார்ம் – ‘விரும்பாத’ ஆலன் பார்டர், மகிழ்ச்சியில் திராவிட்! | Virat Kohli form Unwanted for aussie says Allan Border Dravid is happy

விராட் கோலியின் ஃபார்ம் - ‘விரும்பாத’ ஆலன் பார்டர், மகிழ்ச்சியில் திராவிட்! | Virat Kohli form Unwanted for aussie says Allan Border Dravid is happy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin