Last Updated:
மகாராஷ்டிராவில் எல்லோருக்கும் மராத்தி தெரிய வேண்டுமன அவசியம் இல்லை என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பியாஜி ஜோசி பேசியிருந்த நிலையில், முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் பேச்சு கவனம் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் மொழி மராத்தி தான் என்றும் அதனால் இங்கு வசிப்பவா்கள் மராத்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் கூறியுள்ளார்.
மும்பையின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன என்றும் அதனால், மும்பையில் வசிக்க வேண்டும் என்றால் மராத்தி கற்றுக் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் சுரேஷ் பையாஜி ஜோஷி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது கடும் எதிர்ப்புக்கு உள்ளான நிலையில், இந்த விவகாரத்தில் ஆளும் பாஜக அரசின் நிலைப்பாடு என்ன என்று சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்புன.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ், பையாஜி ஜோஷி என்ன பேசினாா் என்பதை தாம் இதுவரை கேட்கவில்லை என்றும் ஆனால், மகாராஷ்ராவின் மொழி மராத்திதான் என்றும் கூறினார். தாய் மொழி மீது மரியாதையும் அன்பும் இருந்தால், மற்ற மொழிகள் மீது அதே மரியாதை இருக்கும் என்றும் அவர் விவரித்தார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக ஆளும் மாநிலத்தை சோ்ந்த முதலமைச்சரே பிராந்திய மொழியை முன்னிறுத்தி இப்படி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
March 07, 2025 11:51 AM IST
“மகாராஷ்டிராவில் அனைவரும் மராத்தி கற்றுக்கொள்ளவேண்டும்…” – முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் வலியுறுத்தல்


