• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகளுடன் தேநீர் அருந்திய சிறுவனைக் கட்டிவைத்து அடித்த வழக்குரைஞர்!

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
மகளுடன் தேநீர் அருந்திய சிறுவனைக் கட்டிவைத்து அடித்த வழக்குரைஞர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தரப் பிரதேசத்தில் தனது மகளுடன் தேநீர் அருந்திய சிறுவனை வழக்குரைஞர் ஒருவர் கடத்திச்சென்று கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய வழக்குரைஞரையும் அவரின் மூத்த சகோதரரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரிலுள்ள பித்தூர் பகுதியில் 17வயது சிறுவன் தனது தோழியான 14 வயது சிறுமியுடன் கடையில் தேநீர் அருந்தியுள்ளார். இதனைக் கண்ட சிறுமியின் தந்தையும் வழக்குரைஞருமான பிரஜ் நாராயண் நிஷாத் தனது சகோதரர் தேஜ் நாராயண் நிஷாத் உடன் சேர்ந்து சிறுவனை பண்ணை வீட்டிற்கு காரில் கடத்தியுள்ளார்.

அங்கு சிறுவனின் கை, கால்களை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் சிறுவன் பலத்த காயமடைந்தார்.

மேலும், சிறுவனின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சிறுவனைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பிறகே வழக்குரைஞர் சிறுவனைக் கடத்தி துன்புறுத்தியது பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.

சிறுவன் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பின்குத்பூர் பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் காவல் துறையினர் சிறுவனை காயங்களுடன் மீட்டனர். அவர்கள் தாக்கியதில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால், தற்போது ஐசியூ பிரிவில் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.

வழக்குரைஞரையும் அவரின் சகோதரரையும் காவல் துறையினர் கைது செய்தனர். எனினும் இச்சம்பவத்தில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் குறுக்கிட்டு காவல் நிலையத்திற்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

Previous Post

பதில் சட்டமா அதிபர் நியமனம்

Next Post

“நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” – சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு | Ravindra Jadeja has announced his retirement from T20i cricket

Next Post
“நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” – சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு | Ravindra Jadeja has announced his retirement from T20i cricket

“நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன்” - சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு | Ravindra Jadeja has announced his retirement from T20i cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin