பொது மக்கள் நெகிழ்ச்சி
கரூர் நெரிசலில் முருகேசன் என்பவரது மனைவி ரேவதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகேசன் கூறும்போது. ‘எனது மகனுக்கு அரசு வேலை தருவது ஆறுதல் அளிக்கிறது. கடைசி வரை எங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
அவரையும் நாங்கள் கடைசிவரை பார்த்துக் கொள்வோம்’ என்றார்.
முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் கரூருக்கு வருகை தந்தது பற்றி பொது மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘ஒரு கட்சியின் தலைவராக கரூருக்கு வந்திருந்த விஜய், தற்போது தமிழகத்தின் அரியணையில் முதல்- அமைச்சராக அமர்ந்து அடியெடுத்து வைப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும், விஜய் பிரசாரத்துக்கு வரும் போது போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் அவர் தற்போது முதல் – அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விழா நடக்கும் இடம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு இருப்பதை பார்க்கும்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது உள்ளது’ என்று தெரிவித்தனர்.
பெண்கள் பாதுகாப்பு
முதல்-அமைச்சர் விஜய்யின் 50 நாள் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு கொண்டு வந்துள்ள ‘சிங்கப்பெண் திட்டம்’ மற்றும் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ ஆகியவை தங்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்றும், தங்கள் பகுதியில் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பது நிம்மதி அளிப்பதாகவும் கூறினார்கள்.
தற்போது 10 மணிக்கு மேல் மதுக்கடைகளின் வாசலில் போலீசார் கட்டாயப் பணியில் ஈடுபட்டு, சட்ட விரோத மது விற்பனையை முற்றிலும் ஒழித்துள்ளதால், இரவு நேரங்களில் அச்சமின்றி நடமாட முடிகிறது எனவும் விஜய்யை பார்க்க வந்திருந்த பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
தவெக அரசு மாற்றம்
போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் புகார்கள் தெரிவித்தால், அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே த.வெ.க.வினர் களத்தில் இறங்கி பிரச்சினை களைத் தீர்த்து வைப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
இப்படி முதல்- அமைச்சர் விஜய்யை பார்க்க வந்திருந்த பெண்கள் பலர் தமிழகத்தில் த.வெ.க. அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பாராட்டினர்.
