Last Updated:
மாஜி லட்கி பாஹின் திட்டத்தில் 90 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டு, உதவித் தொகை மற்றும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதை எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி அரசு செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் மாஜி லட்கி பாஹின் திட்டத்தில் 90 லட்சம் பெண்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சுமார் 2 கோடியே 43 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 1.57 கோடியாக குறைந்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 36 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
அடையாளச் சரிபார்ப்பு பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்காத காரணத்தாலும், அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளாலும் 24 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு மேல் இருப்பது, ஒரே குடும்பத்தில் இருவருக்கு மேல் பயன் பெறுவது, அரசு ஊழியர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் நீக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நமோ விவசாயிகள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே நிதியுதவி பெறும் 8 லட்சம் பெண்களுக்கு, இந்தத் திட்டத்தின் தொகை ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Mumbai,Maharashtra
மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 90 லட்சம் பேர் திடீர் நீக்கம்… அதிர்ச்சி கொடுத்த மகாராஷ்டிரா அரசு


