Last Updated:
கேரள மாநிலம் முழுவதும் தங்குதடையின்றி மின்விநியோகம் கிடைக்கும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வேலைவாய்ப்பில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, நலத்திட்ட ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோழிகோட்டில் நடந்த நிகழ்வில் இரண்டு தொகுப்புகளாக 60 வாக்குறுதிகள் கொண்ட இடதுசாரி ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் வளர்ச்சியடைந்த மாநிலமாக கேரளாவை மாற்றுவதே தங்கள் இலக்கு எனக் கூறினார். முன்னதாக தேர்தல் அறிக்கையில், நலத்திட்ட ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, புதிதாக 60 ஆயிரம் வேலைவாய்ப்புகளை மாநிலத்தில் உருவாக்குவது, 20 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு பொருளாதார உதவிகள், ஒரு லட்சம் சிறு குறு நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை கடன் உதவி, நஷ்டத்தில் இயங்கும் மாநில போக்குவரத்து கழகத்தின் நிதிநிலையை சீர் செய்வது, மாநிலம் முழுவதும் தங்குதடையின்றி மின்விநியோகம் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.


