இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கும் பிரிந்து விட்டதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா அவரது மகன் அகஸ்தியாவை அழைத்து கொண்டு விமான நிலையத்திற்கு வந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
அதிரடியான பேட்டி மற்றும் நேர்த்தியான பவுலிங்கால் இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத இடத்தை ஹர்திக் பாண்ட்யா பிடித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக அவரைத்தான் இந்திய அணியின் கேப்டனாக பிசிசிஐ நியமித்து இருந்தது. இதேபோன்று நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அணியின் துணை கேப்டனாக பொறுப்பில் இருந்தார்.
அதற்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை அணியின் கேப்டனாக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளான ஹர்திக் பாண்டியா உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி பாராட்டுகளை பெற்றார். இருப்பினும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த சில மாதங்களாக புயல் வீசி வருகிறது.
அதாவது ஹர்திக் பாண்ட்யா அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடந்த பல விழாக்களில் தனிநபராக கலந்து கொண்டு ரசிகர்களின் பெரும் அனுதாபத்தை பெற்றார்.
இதையும் படிங்க – பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் 5 தமிழக வீரர்கள் யார், யார்?
ஹர்திக் பாண்டியா – நடாஷா இருவரும் பிரிந்து விட்டதாக பேசப்படும் நிலையில், அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. தனது மனைவி குறித்த கேள்விகளுக்கு ஹர்திக் பதில் அளிக்காமல் இருக்கிறார். இருவருக்கும் அகஸ்தியா என்ற மகன் உள்ளார். அவரிடம் பேரன்பு கொண்டுள்ள ஹர்திக் பாண்ட்யா தனது மகன் குறித்த பதிவுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் மனைவி நடாஷா, அவரது மகன் அகஸ்தியாவை அழைத்துக் கொண்டு மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க – டி20 கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ் – பிசிசிஐ முக்கிய முடிவு
மகனுடன் அவர் எங்கு சென்றார் என்பது உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து தனக்கு ஓய்வு அளிக்குமாறு ஹர்திக் பாண்ட்யா பிசிசிஐ-யிடம் கூறியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
