Last Updated:
கணவர் இரண்டாவது திருமணம் செய்த விரக்தியில், பெண் ஒருவர் தனது 2 மகன்களை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் இரு மகன்களை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இரண்டாவது திருமணம் செய்த விரக்தியில் முதல் மனைவி விபரீத முடிவு எடுத்துள்ளார். நடந்தது என்ன?
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரவந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 12 மற்றும் 10 வயதில் இரு மகன்கள் இருந்தனர். அண்மைக் காலமாக பிரவீன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதை அறிந்து அவரது மனைவி ஸ்ரவந்தி கணவனைக் கண்டித்துள்ளார். அதை பொருட்படுத்தாத பிரவீன், அந்தப் பெண்ணையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து ஸ்ரவந்தி, தனது இரு மகன்களை அழைத்துக்கொண்டு தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். சில நாட்கள் கடந்ததும் ஸ்ரவந்தியின் பெற்றோர், அவரை கணவனுடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெற்றோர் அழுத்தம் கொடுத்து அவரை சம்மதிக்க வைத்துள்ளனர். பின்னர், ஐதராபாத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு அழைத்துவந்து விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், வெளியே வேலைக்குச் சென்றிருந்த பிரவீன் பிற்பகல் 1.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்ததும் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு, மகன்கள் மற்றும் மனைவி மூவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்ததை கண்டு ஆடிப்போயுள்ளார்.
கணவர் இரண்டாவது திருமணம் செய்த விரக்தியில், பெண் ஒருவர் தனது 2 மகன்களை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகன்கள் இருவரை கொன்றுவிட்டு, தற்கொலை செய்த தாய்… கணவர் இரண்டாவது திருமணம் செய்ததால் விரக்தி…


