இக்காலத்தில் சந்தையில் பணத்தை முதலீடு செய்யப் பல புதிய வழிகள் இருந்தாலும், அனைவரும் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்திலிருந்து எவ்வித ஆபத்துமின்றி நிலையான வருமானத்தைப் பெறவே விரும்புகிறார்கள். அதனால் தான், அரசின் ஆதரவு பெற்ற சேமிப்புத் திட்டங்கள், பத்திரங்கள் (bonds) மற்றும் வங்கி வைப்புத்தொகைகள் ஆகியவை இன்றும் மிகவும் பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன. பொதுவாக, முதலீடு என்று வரும்போது அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது ‘நிலையான வைப்புத்தொகை’ (Fixed Deposit) திட்டம் தான்.


