• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

போலி போலீசார், போலி வக்கீல் அல்ல… காவல் நிலையமே போலியாக நடத்தி மோசடி செய்த கும்பல் – உ.பி.யில் பகிர் சம்பவம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 11, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
போலி போலீசார், போலி வக்கீல் அல்ல… காவல் நிலையமே போலியாக நடத்தி மோசடி செய்த கும்பல் – உ.பி.யில் பகிர் சம்பவம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்காகவே இந்த காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக, இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நொய்டாவில் திடீரென சர்வதேச காவல் நிலையம் எப்படி முளைத்தது என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே உள்ளூர் போலீசார் சர்வதேச காவல் நிலையத்திற்குள் புகுந்துள்ளனர். அவர்களைக் கண்டதும், அங்கிருந்த இண்டர்போல் போலீசார் ஆடிப் போயுள்ளனர்.

திருடனுக்கு தேள் கொட்டியது போன்று வாயடைத்து நின்ற அவர்களைப் பிடித்து, போலீசார் தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது அவர்களின் உலக மகா மோசடி அம்பலமாகியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிபாஷ் சந்திரா, பாபுல் சந்திர மண்டல், பிந்து பால் உட்பட 6 பேர் மோசடி வலை பின்னியது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டம் மற்றும் பட்ட படிப்பு படித்த இவர்கள், பக்கா பிளான் போட்டு சர்வதேச போலீஸ் மற்றும் குற்ற புலனாய்வு அலுவலகத்தை நொய்டாவில் திறந்துள்ளனர்.

#WATCH | Noida, Uttar Pradesh: Central Zone Police busts a fake International Police and Crime Investigation Bureau Office. During the operation, they seized multiple fake IDs, stamps, and letterheads. pic.twitter.com/KX08v29LxF


— ANI (@ANI) August 10, 2025

வாடகை கட்டடத்தை அலுவலகமாக மாற்றி தங்களை அரசு அதிகாரிகள் போன்று காட்டிக் கொண்டுள்ளனர். போலி சின்னங்கள், அடையாள அட்டை, ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகள், ஆவணங்கள், சான்றிதழ்களையும் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை, தங்களுக்கு என உருவாக்கிய இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அத்துடன், உள்ளூர் முதல் உலக பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் அதில் கூறியுள்ளனர். அதை பார்த்து உண்மையென நம்பிய பலர், போலி இண்டர்போல் போலீசாரை அணுகி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது

மேலும், நன்கொடை என்ற பெயரில் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, போலி காவல் நிலையத்தில் இருந்து ஒன்பது செல்போன்கள், 17 அரசு முத்திரைகள், ஆறு காசோலை புத்தகங்கள், ஒன்பது அடையாள அட்டைகள், அமைச்சக சான்றிதழ்கள், பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Noida,Gautam Buddha Nagar,Uttar Pradesh

First Published :

August 11, 2025 3:03 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

போலி போலீசார், போலி வக்கீல் அல்ல… காவல் நிலையமே போலியாக நடத்தி மோசடி செய்த கும்பல் – உ.பி.யில் பகிர் சம்பவம்!

Read More

Previous Post

யாழ்.பகுதியின் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

Next Post

“கிரிக்கெட்டை விடவும் வாழ்க்கைப் பெரியது” – விரைவு ஓய்வு குறித்து பிரியங்க் பஞ்ச்சல் | Life is bigger than cricket – Priyank Panchal on early retirement

Next Post
“கிரிக்கெட்டை விடவும் வாழ்க்கைப் பெரியது” – விரைவு ஓய்வு குறித்து பிரியங்க் பஞ்ச்சல் | Life is bigger than cricket – Priyank Panchal on early retirement

“கிரிக்கெட்டை விடவும் வாழ்க்கைப் பெரியது” - விரைவு ஓய்வு குறித்து பிரியங்க் பஞ்ச்சல் | Life is bigger than cricket - Priyank Panchal on early retirement

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin