
காலி, படபொல பகுதியில், ஒரு வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி எண் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில் ஏத்கந்துரவைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர், கைது செய்யப்பட்டார்.
கரந்தெனிய பொலிஸ் பிரிவில் 2024 ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த பலருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காலி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

