போலி இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை அகதிகளுக்கான இந்திய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் தயாரித்த இரண்டு இலங்கையர்கள் உட்பட மூவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சந்தேக நபர்களை தமிழகத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு இலங்கையர்களுடன் இந்திய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கடவுச்சீட்டுகளை வழங்கியவர் என சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள், 21 இலங்கையர்களுக்கு இந்திய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

