• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

போராட்டக்காரர்கள் இடையே சிக்கிய நேபாள நிதி அமைச்சருக்கு நேர்ந்த கதி! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ | உலகம்

GenevaTimes by GenevaTimes
September 9, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
போராட்டக்காரர்கள் இடையே சிக்கிய நேபாள நிதி அமைச்சருக்கு நேர்ந்த கதி! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 09, 2025 4:15 PM IST

நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களிடம் சிக்கிய அந்நாட்டு நிதி அமைச்சருக்கு நேர்ந்த நிலை இணையத்தில் வைரலாகிவருகிறது.

News18News18
News18

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், பிரதமரின் வீடு, அமைச்சர்களின் வீடு உள்ளிட்டவைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டு நிதி அமைச்சரை பொதுமக்கள் கடுமையாக துரத்தித் துரத்தி தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், ஊழல் நிர்வாகம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். அப்போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து நேற்று இரவு சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்குவதாக பிரதமர் அறிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலகினர்.

இந்நிலையில், இன்றும் அரசுக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் சர்மா ஒலியை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காத்மாண்டுவில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர்.

மேலும் காத்மாண்டுவில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். இதேபோன்று லலித்பூரில் உள்ள அமைச்சர் பிரித்வி சுபா குருங்கின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதனைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் பிரசன்டா வீடு மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேலும், காத்மாண்டுவில் உள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலியின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அவரது வீடு பற்றி எரிந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

BREAKING NEWS | நேபாள நிதியமைச்சரை எட்டி உதைத்த மக்கள் | நேபாள நிதியமைச்சர் விஷ்ணு பிரசாத்தை ரோட்டில் துரத்தி துரத்தித் தாக்கிய மக்கள் | #Nepal #BreakingNews #News18TamilNadu pic.twitter.com/sg8uDFt8ey


— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 9, 2025

இப்படி பரபரப்பான சூழல் அங்கு நிலவி வரும் வேளையில் தற்போது அந்நாட்டு நிதி அமைச்சரை பொதுமக்கள் சேர்ந்து துரத்தி துரத்தி உதைக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. போராட்டக்காரர்கள் இடையே சிக்கும் அந்நாட்டு நிதி அமைச்சர் உயிரை காப்பாற்றி கொள்ள ஓட முற்படும் சூழலில், அவரை போராட்டக்காரர்கள் துரத்தி துரத்தி அடித்து உதைக்கின்றனர். தற்போது இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

September 09, 2025 4:05 PM IST

Read More

Previous Post

நள்ளிரவில் மருத்துவமனைக்குச் சென்ற ரோகித் சர்மா.. நலம் பெற வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை! | விளையாட்டு

Next Post

2023 முதல் மின்சார வாகனங்கள் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 30 தீ விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – துணை அமைச்சர் – Malaysiakini

Next Post
2023 முதல் மின்சார வாகனங்கள் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 30 தீ விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – துணை அமைச்சர் – Malaysiakini

2023 முதல் மின்சார வாகனங்கள் சம்பந்தப்பட்ட கிட்டத்தட்ட 30 தீ விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – துணை அமைச்சர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin