மொணராகலையில் இருந்து பதுளையில் உள்ள சில பாடசாலைகளுக்கு மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற ‘சிசுசெரிய’ தனியார் பேருந்தின் ஓட்டுநர், கடுமையான மதுபோதையில் இருந்த நிலையில் பதுளை – பசறை வீதியில் அமைந்துள்ள உடவெல மகா வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (04) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்களுடன் ‘சிசுசெரிய’ பேருந்து ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பதுளை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து, பதுளை போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளுடன் உடனடியாகச் செயல்பட்டு இப்பேருந்தைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தின் போது பேருந்தில் பதுளை நகரின் 4 பாடசாலைகளை சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 40 பேர் பயணம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் மாற்று வாகனங்கள் oஊடாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


