Last Updated:
மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பும் உதவியாளர்கள் மூலம் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில், மாற்றுத்திறனாளி தேர்வர்கள் சொந்தமாக உதவியாளர்களை பயன்படுத்தும் விதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் விரும்பும் உதவியாளர்கள் மூலம் தேர்வுகளை எழுதி வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்ற உதவியாளர்கள் கொண்ட குழுக்களை உருவாக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதியைவிட, உதவியாளர்களுக்கு 2 அல்லது 3 கல்வியாண்டுகள் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
September 04, 2025 12:10 PM IST


