Last Updated:
போக்சோ சட்டத்தில் 18 வயது உச்சவரம்பைக் குறைக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியான பதில் அளித்துள்ளது.
போக்சோ சட்டத்தில் உள்ள 18 வயது என்ற உச்சவரம்பைக் குறைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
18 வயதுக்குக் கீழ் உள்ள இருபாலர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதனிடையே இவ்விவகாரத்தில் வயது வரம்பை, 18லிருந்து 16 ஆகக் குறைக்க வேண்டும் என விவாதங்கள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வயது வரம்பைக் குறைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது பதிலளித்துள்ள மத்திய அரசு, போக்சோ வழக்கில் சிறார் வயதை 18 என்ற அளவிலிருந்து குறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. சமூக சீர்திருத்தம், இளம்பருவத்தினரின் சுயவிருப்பு என்ற பெயரில் வயது வரம்பைக் குறைக்கக் கூடாது எனவும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வயதைக் குறைப்பது, சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதாக மாறிவிடும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
July 24, 2025 7:48 PM IST
போக்சோ சட்டத்தில் 18 வயது உச்சவரம்பு குறைக்க திட்டம்? – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதியான பதில்


