இந்த வழக்கில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்ட பின்னர், அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம் மற்றும் ஹெரோன் பால், பைக் பாபு என மொத்தமாக இந்த வழக்கு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைதானவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

