பொற்கால ஆட்சிக்கு குடைச்சல் தருகிறோமா?
கே.பாலகிருஷ்ணன் அறிவிக்கப்படாத அவசர நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறதா என கேள்வி எழுப்பினார். என்னவென்றால், எந்த போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி தருவது கிடையாது. போராடும் உரிமையை அரசியல் சாசனம் கொடுத்து உள்ளது. திமுகவோ, அதிமுகவோ, காங்கிரஸோ தருவது இல்லை. போராட்டத்தை தடுக்க ஆளும் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது. என் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் போங்கள். ஆனால் போராடவே கூடாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது. எனது குறைகள், கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வழி என்ன உள்ளது. அதற்கு போராட்டம் ஒன்றுதான் வழியாக உள்ளது. ஒரு பொற்கால ஆட்சி நடக்கும் போது, இவர்கள் அநாவசியமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ? என கேள்வி எழுப்பினார்,

