சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அபாயகரமான முறையில் பொது இடத்தில் ஆயுதங்களை ஏந்தி சுற்றி திறந்துள்ளார். அதனை அடுத்து சந்தேகிக்கப்படும் 62 வயதுடைய நபரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
இது குறித்து ஜூன் 10 மாலை 3.20 மணியளவில் பேருந்தில் கத்தி வைத்திருப்பதாக ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
பேருந்தில் இருந்தபோது, அந்த நபர் கத்தியைக் காட்டிவிட்டு கெயிலாங் சாலையில் இறங்கினார்.
காவல்துறை நடத்திய விசாரணையில், சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான படங்களை வைத்து சந்தேக நபரின் அடையாளத்தை கண்டறிந்தனர்.
புகார் பெறப்பட்ட 3 மணி நேரத்தில் அந்த நபர் விக்டோரியா தெருவில் அவரைக் காவல்துறை கைது செய்தது.
விசாரணையில் அவரிடம் 5 கத்திகள் இருப்பது தெரிய வந்தது. அதனை காவல்துறை பறிமுதல் செய்தனர்.
பொது இடத்தில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக அந்த நபர் ஜூன் 12 இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 6 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
The post பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த முதியவர் கைது!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin