சிங்கப்பூர்: பொதுச் சேவை துறையில் சேருபவர்கள் பிரச்சனைகளை முன்கூட்டியே அறியக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும் என கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
முன்கூட்டியே திட்டமிடல் இருந்தால் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
பொதுச் சேவை ஆணைக்குழுவின் உபகாரச் சம்பள விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பொதுச் சேவை துறையில் பணியாற்றுபவர்கள் மற்றவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயலாற்றுபவர்களாக இருக்கின்றனர்.
மேலும் சிங்கப்பூரர்கள் அவர்களின் முழு ஆற்றலை வெளிப்படுத்தவும் அவர்கள் உதவ வேண்டும் என்று சான் கூறினார்.

