தில்லியில் உள்ள திபெத்திய சந்தை அருகே திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் மீது பேருந்து மோதிய விபத்தில் காவலர் உள்பட 2 பேர் பலியாகினர்.
வேகமாக வந்த தில்லி அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து காவலர், மற்றொரு நபரின் மீது மோதியுள்ளது. தில்லி போக்குவரத்துக் கழக ஊழியரைத் தவிர, அப்பேருந்தில் வேறுயாரும் பயணிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விக்டரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
