பேராதனைப் பல்கலைகழகத் தமிழ்த்துறை மாணவர் மன்றத்தின் வெளியீடான யே. கிறித்துறாஜாவின் ‘கடற் கொலைகள்’ சிறுகதைத் தொகுப்பானது வெளியிடப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழக பிரதான கலைக் கட்டடக் கருத்தரங்க மண்டபத்தில் கடந்த புதன் கிழமை (13.06.2026) இந்த நிகழ்வு நடைபெற்றது.
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தலைமை உரையை ஸ்ரீ. பிரசாந்தனும் வாழ்த்துரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். ஜெயசீலனும் வழங்கினர்.
அத்துடன் நூல் அறிமுகவுரையை இணைந்த சுகாதார விஞ்ஞானக் கற்கைகள் பீடத்தின் மாணவன் பிரகலாதன் நிஷங்கனும், நூல் விமர்சன உரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் துறைத் தலைவர் பேராசிரியர் துரை மனோகரனும் வழங்கினர்.
இந்நிகழ்வில் கண்டி சித்திலெப்பைக் கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஏ. அலீம் நூற் பிரதியைப் பெற்று நிகழ்வை சிறப்பித்திருந்ததுடன் நிகழ்வுக்கான ஏற்புரையை நூலாசிரியர் யே. கிறித்துறாஜா ஆற்றினார்.
இந்நிகழ்வில் தமிழ்த்துறை விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், ஏனைய துறைகளைச் சார்ந்த விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் என்போர் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

