ஈப்போ: பாகான் செராயில் உள்ள சீன மயானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்ததில் அடையாளம் தெரியாத நபர் உடல் கருகி உயிரிழந்தார். திங்கள்கிழமை (ஜூன் 10) மதியம் சுமார் 2.05 மணியளவில் தீ விபத்து குறித்த பேரிடர் அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் பாலினம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றார். பாதிக்கப்பட்டவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தார். புல் வளர்ந்த வெற்றுக் கட்டிடத்தின் அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தது. கார் சுமார் 50% எரிந்தது. மேலதிக விசாரணைகளுக்காக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


