ஈப்போ,லங்காப்பில் உள்ள குடியேற்றக் கிடங்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 63 சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் அவர்களது சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 42 ஆண்களும், 18 முதல் 47 வயதுக்குட்பட்ட 21 பெண்களும் அடங்குவர் என மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் மீயோர் ஹிஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.
குடிநுழைவுச் சட்டம் மற்றும் குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட அவர்களின் சிறைத் தண்டனையை முடித்து அபராதத்தை செலுத்திய பின்னர் அவர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மியோர் ஹிஸ்புல்லா கூறினார். சட்டவிரோத குடியேற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டம் என்று வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


