அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 (1)(ஏ)-இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம். அதேவேளையில் ஊடகத்தில் பணியாற்றுவோா், குறிப்பாக முக்கிய பொறுப்பில் இருப்பவா்கள் செய்திகள், கருத்துகளை வெளியிடுவதில் மிகுந்த எச்சரிக்கை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தி, மனுதாரா்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தனா்.

