பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஈரான் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும் இருதரப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்.
பேச்சை தொடர ஈரான் எங்களிடம் கோரியது. அதை நாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்களிடம் தெளிவாக அமெரிக்கா சொல்லியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் இது குறித்து விரிவான விளக்கத்தை அவர் வழங்கவில்லை. (a)

