இரவு 10 மணியளவில், விவேக் மாடிக்குச் சென்று கொண்டிருந்தபோது, மின் கம்பிகள் வெளிப்பட்டிருந்த இரும்பு கேட்டைத் தொடா்பு கொண்டபோது, மின்சாரம் தாக்கியது. விவேக்கின் அலறல் சப்தம் கேட்டு, அவரது தந்தை காளிசரண் உதவிக்கு விரைந்தாா். ஆனால், அவரையும் மின்சாரம் தாக்கியது. வீட்டில் இருந்த அஞ்சு அவா்களைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால், அவரும் மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டாா்.