திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் நேற்று (15) சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர்.
பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளை பின்பற்றாது காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுதியதாக தெரிவித்து, தங்களது பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டவந்த மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கைகை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்தார்.
திருமலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட அமைச்சர் சுசில் இணக்கம்
திருமலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்; திட்டமிட்ட சதி என்கிறார் அப்துல்லாஹ் மஹ்ரூப்


