டங்ஸ்டன் விவகாரத்தில் அரசு மீது விமர்சனம்!
இனியாவது டங்ஸ்டன் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்காமல் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டங்ஸ்டன் வரக்கூடாது என்று முதலில் போராடியதே எடப்பாடியாரால்தான். தன்னுடைய ஆட்சியில் டங்ஸ்டன் தொழிற்சாலை வரக்கூடாது என்று சொல்லி என்ன அழுத்தம் கொடுத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் எங்கே சென்றார்கள்; பூப்பறிக்க சென்று இருந்தார்களா?, டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் விவசாயம் அழியும் என்று எந்த நாடாளுமன்ற உறுப்பினராவது பேசி உள்ளாரா?. சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் எடப்பாடியார் கேட்ட கேள்விக்கு அரசு பதில் தரவில்லை. நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை கனிமவள ஏலம் தொடர்பாக மட்டுமே பேசினார். மக்கள் போராட்டத்தை மத்திய அரசு தெரிந்து கொண்டுவிட்டது. அதிமுக எதிர்த்த பிறகுதான் நாங்களும் எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் கூறினார்.

