கோலாலம்பூர் | மார்ச் 14, 2026:
தேசியக் கூட்டணியின் (Perikatan Nasional) உயர்மட்டக் குழுவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டணியின் புதிய பொதுச் செயலாளராக டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹாசன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கெராக்கான் (Gerakan) தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டணியின் உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு, தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சம்சூரி மொக்தார் புதிய நிர்வாகக் குழுவை அறிவித்தார்:
பாஸ் துணைத் தலைவர் அஹ்மட் சம்சூரி மொக்தார் கடந்த ஆண்டு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காலியாக இருந்த பொருளாளர் பதவிக்குக் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமட் நோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ அனுவர் மூசா தேசியக் கூட்டணியின் தகவல் தொடர்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெர்சத்து (Bersatu) துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ராட்ஸி ஜிடின் தேர்தல் பிரிவு இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஒவ்வொரு உறுப்புக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துணைத் தலைவர்கள் வரிசை அறிவிக்கப்பட்டுள்ளது: அதனடிப்படையில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் (பெர்சத்து), டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் (பாஸ்), டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் (கெராக்கான்), புனிதன் (MIPP) ஆகியோர் அடங்கும்.
மேலும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, வோங் சியா ஜென், சிவக்குமார் கிருஷ்ணன் ஆகியோர் நிர்வாகப் பணிகளை வலுப்படுத்த மூன்று துணைப் பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
மலேசியாவின் அரசியல் சூழலில் தேசியக் கூட்டணியைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நியமனங்கள் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது வரும் தேர்தல்களுக்கான முன்னேற்பாடாகக் கருதப்படுகிறது.




