• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பென்சனில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசு தரப்பு விளக்கம் இதான்

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
பென்சனில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசு தரப்பு விளக்கம் இதான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது. இது பற்றிய விவரத்தை அளிக்க ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, CSS (ஓய்வூதியம்) விதிகள், 2021ன் விதி 50 (15)ஐ மேற்கோள்காட்டிய அலுவலக குறிப்பாணையில், ஒரு அரசு ஊழியர் அரசுப் பணியில் சேர்ந்தவுடன், அவர் குடும்பத்தின் விவரங்களை படிவம் 4ல் அலுவலகத் தலைவரிடம் கொடுக்க வேண்டும். அதில் வாழ்க்கை துணை, குழந்தைகள், பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகள் (குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராக இருந்தாலும், இல்லை என்றாலும்) ஆகியோருடன் தொடர்புடைய அனைத்து விவரங்களும் அடங்கும்.

விளம்பரம்

Also Read:
இன்றே கடைசி நாள்.. GPay வாடிக்கையாளர்களே ரெடியா? ரூ.1001 கேஷ்பேக் வேணுமா? அப்ப இத பண்ணுங்க!

மேலும், அரசுப் பணியாளர், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன், ஓய்வூதியத் தாள்களுடன் மீண்டும் படிவம் 4-ல் குடும்பத்தின் புதுப்பித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் இருந்து மகளின் பெயரை நீக்குவது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி குறிப்புகள் வந்ததாக அலுவலக குறிப்பாணை தெரிவித்தது. ஓய்வூதியத்திற்கு தகுதி உடையவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியம் பெறுபவர் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெளிவுபடுத்தியுள்ளது. ​​

விளம்பரம்

அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக அவரது மகள் கருதப்படுகிறார். ஆகையால், குடும்ப உறுப்பினர்களின் விவரங்களில் மகளின் பெயர் சேர்க்கப்பட்டுதான் இருக்கும். குடும்ப ஓய்வூதியத்திற்கான தகுதி, ஓய்வூதியம் பெறுபவர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர் இறந்த பிறகு தற்போதுள்ள விதிகளின்படி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமனி அடைப்பை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த 7 எளிய குறிப்புகள்.!


தமனி அடைப்பை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த 7 எளிய குறிப்புகள்.!

அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதி – குழந்தைகளில் ஓய்வூதியத்தில் யாருக்கு முதல் உரிமை?

  • ஓய்வூதியம் பெறக்கூடிய நிறுவனத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் இறந்தால், கணவரை இழந்த விதவை அல்லது மனைவியை இழந்த கணவன் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியம் பெற இறந்த நபரின் கணவனோ மனைவியோ இல்லாதபோது, அது குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

  • 25 வயதுக்கு உட்பட்டவர்கள் அல்லது திருமணம் ஆகும் வரை அல்லது ரூ. 9,000/- + DA என்ற மாத சம்பளத்திற்கு மேல் ஊழியரின் குழந்தைகள் சம்பாதிக்கத் தொடங்கும்போது, இவற்றில் எது முதலில் நடக்கிறதோ, அது வரை குடும்ப ஓய்வூதியம் இறந்த ஊழியரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.

  • அரசு ஊழியரின் மகன் அல்லது மகள், மனநலம் குன்றியவராகவோ அல்லது மாற்றுத்திறனாளியாகவோ இருந்தால், 25 வயதை எட்டிய பிறகும் அவர் வாழ்வாதாரம் சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அவர் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியம் பெறலாம்.

  • நிபந்தனைகளுக்கு உட்பட்டு இது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செலுத்தப்படும்.

  • ஓய்வூதிய விதியின்படி, அரசு ஊழியருக்கு மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், குழந்தைகளுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் அவர்களுக்குத்தான் முதல் உரிமை கிடைக்கும்.

.

Read More

Previous Post

ODI WC 2023-ல் ஆப்கனுக்கு எதிராக மேக்ஸ்வெல்லின் ‘பிக் ஷோ’ | மறக்குமா நெஞ்சம் | Maxwell s big show against Afghanistan in ODI WC 2023 on this day

Next Post

1 மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே குடியிருப்பில் வாழ்ந்த சீன நபர்… 4 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த அதிர்ச்சி

Next Post
1 மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே குடியிருப்பில் வாழ்ந்த சீன நபர்… 4 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த அதிர்ச்சி

1 மனைவி மற்றும் 4 காதலிகளுடன் ஒரே குடியிருப்பில் வாழ்ந்த சீன நபர்... 4 ஆண்டுகளுக்கு பிறகு தெரியவந்த அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin