Last Updated:
கல்லூரியில் படித்த மாணவி ஒருவர் ஆசிரியை வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது செல்போனில் யூடியூப் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆசிரியை செல்போனை பறித்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த மாணவி செல்போனை கேட்டு காலணியை கழற்றி சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்த மாணவி ஒருவர் ஆசிரியை வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது செல்போனில் யூடியூப் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த ஆசிரியை அந்த மாணவியிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி வகுப்பு முடிந்து ஆசிரியை வெளியில் செல்லும்போது பின்னாலேயே தொடர்ந்து வந்து செல்போனை கேட்டுள்ளார்.
இந்நிலையில், “என்னை தொடர்ந்து வந்தால் உன்னை செருப்பால் அடிப்பேன்” என்று அந்த ஆசிரியை கூறி இருக்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த மாணவி ஆசிரியையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஆசிரியையை தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த மாணவி தனது செருப்பை கழற்றி ஆசிரியைிடம் காண்பித்து மிரட்டியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து மாணவியின் மிரட்டல்களுக்கு அஞ்சாத அந்த ஆசிரியை துணிச்சலாக எதிர்த்து நின்றுள்ளார். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய மாணவி அருந்ததி அவதாரம் எடுத்து ஆவேசமாக கத்திக்கொண்டே செருப்புடன் பாய்ந்துள்ளார். ஆசிரியையை செருப்பால் சரமாரியாக தாக்கிய மாணவி அவரை கன்னத்தில் அறைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு ஆசிரியையும் மாணவி மீது தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் : பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு
இதையடுத்து உடனடியாக அங்கிருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும்பாடு பட்டு அந்த மாணவியை தடுத்து நிறுத்தினர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்து. நடந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்தி வருவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 22, 2025 7:50 PM IST


