Last Updated:
பெட்ரோல் விலையை பொருத்தளவில் சென்னையில் இன்று (ஏப்ரல் 7) பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட புதிய வரி விதிப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையை பொருத்தளவில் சென்னையில் இன்று (ஏப்ரல் 7) பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ரூ. 100.93 என்ற அளவில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று லிட்டருக்கு 13 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ. 92.39 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த சூழலில் கலால் வரி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் கலால் வரி உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க – பிஎஃப் பணத்தை எடுக்க போறீங்களா.. அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
April 07, 2025 3:46 PM IST


