Last Updated:
இந்த சம்பவத்திற்கு அனுமதி சீட்டு பெறாதவர்களும் மைதானத்திற்குள் நுழைய முற்பட்டதே காரணம் என கூறப்பட்டது
பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவத்தில், ரசிகர்கள் குடும்பத்தினருக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து பெங்களூருவில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எதிர்பாராத விதமாக லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், சின்னசாமி மைதானத்திற்கு வெளியே கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவருக்கு மேல் ஒருவர் மேலே ஏறிக்கொண்டு செல்ல முயற்சித்த சூழலில், நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு அனுமதி சீட்டு பெறாதவர்களும் மைதானத்திற்குள் நுழைய முற்பட்டதே காரணம் என கூறப்பட்டது. வெளியே நெரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளே கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்ததால், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருந்தது.
August 30, 2025 7:28 PM IST


