• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பூர்வீக காணிகளை 2024 இல் வர்தமானி மூலம் சுவீகரித்த வனவளத்திணைக்களம்!

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பூர்வீக காணிகளை 2024 இல் வர்தமானி மூலம் சுவீகரித்த வனவளத்திணைக்களம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செட்டிகுளம் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வீரமாணிக்கங்குளம், மற்றும்
முசல் குத்திக்குளம் ஆகிய பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 300ற்கும்
மேற்ப்பட்ட குடும்பங்களின் காணிகள் 2024 இல் வர்த்தமானி அறிவிப்பு
செய்யப்பட்டு வனவளத்திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட
ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.



வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்
உபாலி சமரசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கடந்த கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட வனவளத்திணைக்களத்தின் கீழ் உள்ள
குளங்கள் மற்றும் காணிகளின் விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

வனவள திணைக்களம்



இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

பூர்வீக காணிகளை 2024 இல் வர்தமானி மூலம் சுவீகரித்த வனவளத்திணைக்களம்! | Forest Department Adopts Through Gazette

“செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரமாணிக்கங்குளம்,
முசல்குத்திக்குளம் ஆகிய கிராமங்களில் 1977 ஆம் ஆண்டு மக்கள்
குடியமர்த்தப்பட்டனர்.

பல்வேறு காரணங்களால் இடம்பெயர்ந்து சென்ற மக்கள்
மீண்டும் திரும்பி வந்து மீளக்குடியமர சென்ற நிலையில் அதற்கு வனவள திணைக்களம்
தடை ஏற்ப்படுத்தியுள்ளது. இதற்கான முடிவினை இன்று எடுக்க வேண்டும்” என
தெரிவித்தார்.


இதன்போது கருத்து தெரிவித்த செட்டிகுளம் பிரதேச செயலாளர்…

குறித்த கிராமத்தில்
வாழ்ந்தவர்கள் என 293குடும்பங்கள் அங்கு மீளக்குடியமர்வதற்கான விண்ணப்பங்களை
சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களில் பலர் காணிக்குரிய ஆவணங்களையும்
வைத்துள்ளனர்.அந்தவகையில் மொத்தமாக 672 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு நாம்
கோரியிருந்தோம்.

அந்த காணிகளுக்குள் இடிந்த நிலையில் உள்ள கிணறுகள் உள்ளது,
பழைய பாடசாலைகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளன,இடிபாடைந்த கட்டடங்கள் உள்ளது.


இந்த காணிகளை விடுவிக்க முடியும் என தெரிவித்திருந்த வனவளத்திணைக்களம் கடந்த
2024 ஆம் ஆண்டு அவற்றை வர்த்தமானி அறிவிப்பு செய்து கையகப்படுத்தியுள்ளது.
என்று தெரிவித்தார்.

வர்த்தமானி அறிவிப்பு 


பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தரும், குடியேற்ற உத்தியோகத்தரின்
பங்களிப்புடனேயே இது வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளதாக வனவளத்திணைக்கள
அதிகாரி தெரிவித்தார்.

பூர்வீக காணிகளை 2024 இல் வர்தமானி மூலம் சுவீகரித்த வனவளத்திணைக்களம்! | Forest Department Adopts Through Gazette

எனினும் அவ்வாறு இடம்பெறவில்லை என பிரதேச செயலாளர்
மறுத்திருந்ததுடன் எமக்கு எந்த ஒரு விடயமும் தெரியப்படுத்தப்படவில்லை என
தெரிவித்திருந்தார்.



இதனையடுத்து குறித்த காணி தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலாளர்,
வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணைந்து பிறிதொரு நாளில் கலந்துரையாடி முடிவினை
எடுக்குமாறு ஒருங்கிணைப்பு குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
வனவளத்திணைக்களம் தொடர்பாக இங்கு கதைப்பதில் எந்தவித பிரிவோசனமும் இல்லை.கதைக்கின்ற எவையும் நடைபெறுவதில்லை என்று விசனம் தெரிவித்திருந்தார்.


இதேவேளை கடந்த கூட்டங்களில் கோரிக்கை விடுவிக்கப்பட்டதற்கமைய வனவளத்
திணைக்களத்தின் கீழ் உள்ள 17குளங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் 24 குளங்கள்
தொடர்பாக திணைக்களம் கள ஆய்வு செய்து வருவதாகவும் 5 குளங்களை விடுவிக்க
முடியாது என திணைக்களத்தினால் சுட்டிகாட்டப்பட்டிருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மராட்டியம்: 2 ஆண்டுகளில் 93 ஆயிரம் பெண்கள் மாயம் | Makkal Osai

Next Post

Aircel Maxis வழக்கு; ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர அனுமதி – வெளியான தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Aircel Maxis வழக்கு; ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர அனுமதி – வெளியான தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Aircel Maxis வழக்கு; ப. சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர அனுமதி – வெளியான தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin