Last Updated:
காதலர் தினத்தன்று அரங்கேறிய படுபயங்கர சம்பவத்தில் நடந்தது என்ன?.
உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் பூட்டிய காருக்குள் துப்பாக்கியால் சுட்டு காதலியைக் கொன்ற காதலன், தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலர் தினத்தன்று காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற காதலன், அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. காதல் பிரேக் அப் செய்ததுடன் வெறொருவரை திருமணம் செய்ய முடிவெடுத்ததால், விரக்தி அடைந்த காதலன் வெறிச்செயலில் ஈடுபட்டதன் பின்னணி என்ன?.
உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வசித்து வந்தவர் 26 வயதான ரேகா. அதே போல டெல்லியின் திரிலோக்புரியில் வசித்து வந்தவர் 32 வயதான சுமித். இவர்கள் இருவரும் 15 ஆண்டுகளாகக் காதலித்துவந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.. செல்போன் அழைப்பையும் எடுக்கவில்லை. இதனால் பதறிப்போன இருவரின் பெற்றொரும் போலீசில் புகாரளிக்க, ரேகா – சுமித் இருவரையும் தேடி போலீசார் விசாரணையில் இறங்கினர்.
அப்போதுதான் நொய்டாவின் 39ஆவது செக்டார் பகுதியில், காணாமல் போன சுமித்தின் டாட்டா கார், சாலையோரம் நின்றிருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனே சம்பவ இடத்தில் கூடிய அதிகாரிகள்.. காரை சோதனை செய்ய முயன்றபோது பேரதிர்ச்சியாக! உள்ளே ரேகா – சுமித் இருவரும் சடலங்களாக கிடந்ததை கண்டு அதிர்ந்து போனார்கள். இருவரின் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட அடையாளம் தென்பட்டது.
மேலும் சுமித்தின் கையில் ஓர் துப்பாக்கியும் இருந்துள்ளது. பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்ததை உணர்ந்த போலீசார், தடயவியல் வல்லுநர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்த பின்னர் இருவரின் சடலங்களையும் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். காதலர் தினத்தன்று சந்தித்துக் கொண்ட ஜோடிக்குள் என்ன நடந்தது? என சந்தேகம் நீடித்து கொண்டிருக்கும்போது ரேகாவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற காதலன் சுமித், தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டதற்கான அடையாளங்கள் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
“காதலில் இப்படியொரு கொடூர முடிவு ஏன்?” என்ற குழப்பத்தில், இருவரின் பெற்றோரையும் அழைத்து விசாரிக்க அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருப்பதாக தெரிகிறது. 15 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த ரேகா – சுமித் இருவருக்கும், சமீபத்தில் பிரேக் அப் ஆகியுள்ளது. காதலிக்கும் போது கண்ணே மணியே என கொஞ்சி, கல்யாண ஆசை காட்டி… சுமித்தை இழுத்த இழுப்புக்கு இழுத்த ரேகா, வேறொருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் காதலனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதில் ஏற்பட்ட விரக்தியில், கடைசியாக நேரில் சந்தித்து பேச வேண்டும் எனக்கூறி ரேகாவை, அவர் வரவழைத்துள்ளார். சம்பவ இடத்தில் காரை ஓரங்கட்டி பேசிக்கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதில் துப்பாக்கியால் காதலியைச் சுட்டுக் கொன்ற சுமித், தன்னை தானே சுட்டு கொண்டு உயிரை விட்டுள்ளார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசம் முழுக்க பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த அதிகாரிகள் விசாரணை அறிக்கைக்குப் பின் இக்கொடூர சம்பவத்தில் உள்ள உண்மை பின்னணி என்ன என்பது குறித்து தெரியவரும். கடந்த சில தினங்களுக்கு முன், சட்ட கல்லூரி மாணவியை வகுப்பறையில் வைத்து சக மாணவன் துப்பாக்கியால் சுட்டு கொன்று, பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட குறிப்பிடத்தக்கது.
பூட்டிய காருக்குள் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்… காதலர் தினத்தில் நடந்த படுபயங்கரம்.. பகீர் பின்னணி!


